mercredi 29 décembre 2010

சிறைக்கு போவாரா ஜெயந்திரர்

இந்தியாவின் பார்வையை ஒட்டுமொத்தமாகத் தமிழகம் பக்கம் திருப்பிய அந்த கைது நடவடிக்கையை மறக்க முடியாது. 2004ஆம் ஆண்டு தீபாவளி இரவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். வரதராஜபெருமாள் கோவில் ஊழியர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தான் அவரை ஹைதராபாத்திலிருந்து கைது செய்து அழைத்து வந்தது எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம்.

சங்கரராமன் கொலை வழக்கை பல வழிகளிலும் ஜெயேந்திரர் தரப்பு இழுத்தடிக்க.. நீண்ட போராட்டத்திற்குப்பிறகு இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் ஒவ்வொருவ ராக பல்டி அடித்துவந்த நிலையில், ஜனவரி 21-ந் தேதி அப்ரூவர் ரவி சுப்ரமணியன் சாட்சியமளிக்க வருகிறார் என்றதும் கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது.

கைது செய்யப்பட்டபோது ரவி சுப்ரமணியன் கொடுத்திருந்த 164 வாக்குமூலத்தில், ""அப்புவுக்கு சொந்தமான ஃபோர்டு ஐகான் காரில் கதிரவன், நான், ரஜினிஜிந்தா மற்றொருவர் ஆகியோர் போய் சங்கரராமன் இருப்பிடத்தை அடையாளம் காட்டினோம் . பெரியவரை தனி அறையில் சந்தித்தேன். 5 லட்சம் பணம் கொடுத்து அப்புவிடம் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்'' என்று தெரிவித்திருந்தார். அவர் இப்போது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையை எதிர்கொள்கிறார் என்பதால் அனைத்து மட்டங்களிலும் எதிர்பார்ப்பு மிகுந் திருந்தது. நாமும் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தோம்.

ஜெயேந்திரர் கேரளாவில் இருந்தார். விஜயேந்திரரோ நீதிபதி அறைக்கு செல்லும் வழியில் பீரோவுக்கிடையே சந்தில் சேர் போட்டுக்கொண்டு போலீசாருக்கும் கோர்ட் ஊழியர்களுக்கும் ஆசி வழங்கி, குங்குமம் வைத்து விட்டுக்கொண்டிருந்தார். நாம் அங்கே சென்றதும் நமக்கும் குங்குமம் வைக்க முயன்றார். நாம் சற்று விலகியதும், ஒரு துண்டு பேப்பரில் குங்குமத்தை மடித்துக்கொடுத்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது பெண் பக்தர், "சுவாமி.. இவா நக்கீரன்' என்றதும் விஜயேந்திரர் சட்டென எழுந்து நின்றுவிட்டார். படபடப்பும் வியர்வையுமாக விழிபிதுங்கி நின்றவர், அசட்டு சிரிப்பு சிரித்தார். அப்போது அவரது செல்போன் சிணுங்க, கேரளாவிலிருந்து ஜெயேந்திரர் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காலை 10.30 மணிக்கு கூண்டில் ஏறிய அப்ரூவர் ரவி சுப்ரமணியன், கையோடு வாட்டர் பாட்டிலையும் வைத்திருந்தார். 20 நிமிடத்திற்கொரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டே குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், "நீதிபதி முன் நீங்கள் சுயமாகத்தான் 164 வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்' என்றபடி, சங்கர ராமன் கொலையையும், அடையாளம் காட்டுவதற்காக காரில் சென்ற சம்பவத் தையும் பற்றி கேட்க, "எனக்கு தெரியாது. ஞாபகம் இல்லை' என்று ரவி சுப்ரமணியன் சொன்னதும் பலருக்கும் அதிர்ச்சி. அப்போது ஜெயேந்திரர் வழக் கறிஞர் குறுக்கிட்டு, "முந்தைய ஆட்சியின் மிரட்டலுக்குப் பயந்தும், மனைவி-பிள்ளைகளை நினைத்தும் போலீஸ் சொல்லி கொடுத்தது போல வாக்குமூலம் கொடுத்துள்ளீர்களா?' என்று கேட்க, "ஆமாம்.. ஆமாம்' என்றார் ரவிசுப்ரமணியன். பழைய நக்கீரன் இதழை எடுத்து, ரவிசுப்ரமணியன் தற்கொலை? தேடப்படும் அப்பு பேட்டி என்ற செய்தி யைக்காட்டி, ""உங்களை கொலைசெய்து விட்டு, தற்கொலை என்று சொல்லி விடுவோமென போலீஸ் மிரட்டியுள்ளது. அதற்குப் பயந்துதான் பொய்யான வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்'' என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டதும், "ஆமாம்' என்றார் ரவிசுப்ர மணியன்.

அவர் விசாரிக்கப்பட்டுக்கொண் டிருந்த நேரத்தில், விஜயேந்திரர் பக்கத் தில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள், ""ரவி எல்லாத்தையும் மாத்தி சொல் லிட்டான். சந்தோஷமா இருக்கு'' என்றனர் கிசுகிசுப்பாக. ரவி சுப்ரமணியத்தின் வாக்குமூலத்தை பிறழ்சாட்சி (பல்டி யடித்தவர்) என புதுவை நீதிமன்றம் பதிவு செய்தது. அவர் சந் தோஷத்துடன் வெளியே வர, எதிர்த்தரப்பும் சந்தோஷ மாக இருந்தது. செப்டம்பர் மாதம் குறுக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து, சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமாமகேஸ்வரி, மேனேஜர் கணேஷ், துரைக்கண்ணு, சங்கர மட ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்க ளின் முந்தைய வாக்குமூலத்திலிருந்து மாறுபட்டே சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் நாம் கேட்டபோது, ""மொத்தம் 370 சாட்சிகள். அதில் 50 சாட்சிகளை முதலில் தேர்வு செய்து, அதிலும் 10 சாட்சிகளை ஒதுக்கிவிட்டு 40 சாட்சிகளை விசாரணைக்கு கொண்டுவந்தோம். 20 சாட்சிகள் பல்டியடித்துவிட்டார்கள். மீதி சாட்சிகள் அரசு தரப்புக்கு சாதகமாக உள்ளனர் . குறுக்கு விசாரணையில் சிலர் பல்டி அடித்தாலும், ஆர்கியூமெண்ட் நடக்கும்போது கேஸை நல்லா நடத்தலாம். அப்ரூவர் ரவி சுப்ரமணியன் விவரம் தெரிந்தவர்.

கொலைக்கான பணம் செட்டில் மென்ட்டான பிறகு அவர் விமானத்தில் மும்பை சென்றதற்கும் அங்கு தங்கியதற்குமான ஆதாரங்கள் இருக்கிறது. திருச்சி லாட்ஜில் தங்கியதற்கான ஆதாரமும் உள்ளது. ரவிசுப்ரமணியன் செல்போனிலிருந்து அப்பு செல்லுக்குப் பேசியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. வீடியோ-ஆடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த வழக்கை வலுவாக நடத்த முடியும்'' என்றார்.

அப்ரூவர் ரவி சுப்ரமணியனுக்கு ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை. அவரே ஜோதிடமும் பார்க்கக்கூடியவர். நக்கீரனிடம் முன்பு அவர் பேசிய போது, ஜெயேந்திரர் ஜாதகப்படி அவர் நீண்டகாலம் ஜெயிலில் இருப்பார் என்று சொல்லி யிருந்தார். வழக்கின் போக்கு எப்படி இருக்கப் போகிறது?

இதுதான் நியாயத் தின்மீது நம்பிக்கை உள்ளவர்களின் கேள்வி.

-காசி
நக்கீரன்-24-01-2010
mardi 28 décembre 2010

பகவானுக்கு எப்படி சேவை செய்வது ?



அப்படின்னா சாமி, திருப்பதியில் இருக்கிற செல்வத்தையெல்லாம் உலகமெல்லாம் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு பகிர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்யுங்கோ.... பகவான் ரொம்பா சந்தோஷப்படுவா இந்த லோகமும் ஷேமமாயிருக்கும். என்ன நான் சொல்றது ?

பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
lundi 3 mai 2010

தமிழ்வாணி - முத்தமிழ்ச் சங்கம் 12ஆம் ஆண்டு விழா

கடந்த மே மாதம் 2ஆம் தேதி பிரான்ஸ் இந்திய இல்லத்தில் நடந்த தமிழ்வாணி முத்தமிழ்சங்க இலக்கிய விழாவில் நடைபெற்ற இலக்கிய சிறப்புரைகள் தலப்புகளை பற்றி நமது பார்வை.

முதல் தலைப்பு - தற்காலப் பார்வையில் திருக்குறள்
தற்காலத்தில் தமிழர்களாகிய நாம் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்களாக ஆகிவிட்டோம் என்பதற்கு இந்த தலைப்பே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதுவும் நம்முடைய அடியார்க்கன்பன் , அட அதாங்க நம்ம தமிழ்வாணி முத்திங்களிதழ் ஆசிரியருங்க... - என்னது தமிழ்வாணி இதழா ? இப்படி கேட்டுக்கிட்டே போனா என்னால ஒன்னும் எழுத முடியாது. என்ன கொஞ்சம் எழுத விடுறிங்களா?

நம்ம அடியார்க்கன்பனே அட அதாங்க நம்ம ஜெயராமன் மிஸ்யே, இப்படி ஒரு தலைப்பை வைத்து இருக்கின்றார் என்றால் அவரும் உலகத்தை பகுத்தறிய முற்பட்டுவிட்டர் என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.

அட அப்படின்னா ஒரு பொல்லாத தலைப்பை எடுத்துப்புட்டாருன்னு தானே கேட்கிறிங்க ? அமாம் அன்பர்களே திருக்குறளை தற்காலப் பார்வையில் நோக்குவது என்பது ஒரு பெரிய விஷயம். அதுவும் தெய்வப்புலவர் திருவள்ளுவரையே புடம் போட்டு பார்க்கும் தைரியம் நம்ம அடியார்க்கன்பனுக்கு வந்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குறிய விஷ்யம். ஏன்னா இவரு " ஈனப் பறையன்" ன்னு நாகூசாமல் பாட்டெழுதிய பாரதியை தற்கால நவீன பார்வை கொண்டு பார்க்க அஞ்சி நடுங்கியவர், இப்போது திடுதிப்பென்று வள்ளவனுக்கே ஈரடி எழுசீரா ?

என்னப்பா ரொம்ப பில்டப் கொடுக்கிறியேன்னு பார்க்காதீங்க, நேரடியா விஷ்யத்துக்கு வந்திடுவோம்.

அட அப்படி என்னதாங்க இருக்கு இந்த திருக்குறள்ள தற்கால பார்வையோட நோக்கறதுக்கு... சரி எதாவது ஒரு அதிகாரத்தை எடுத்துக்கிட்டு அதுல என்னதான் இருக்குன்னு பார்ப்போம்.

அதிகாரம் பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

142.அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

144.எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

145.எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

147.அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

148.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

149.நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

150.அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

நம்ம வள்ளுவர் மாமா என்ன சொல்றாருன்னு புரியுதா ? சிம்ப்ளா சொன்னா அடுத்தவன் பொருளாகிய, அதாவது பிறன் மனைவி, நம்பியவரின் மனைவி, பிறரது உரிமையான பெண் ... அப்படின்னு அடுக்கிக்கொண்டே போகிறார் ...
இவர்களை பார்ப்பது, விரும்புவது, அவர்களிடம் செல்வது, நெறி தவறி நடப்பது, தோளை அணைப்பது போன்றவற்றை செய்யாத ஆண்மகன் பெறாண்மையுடையவன், அறத்தோடு இல்வாழ்கை வாழ்பவன், ஒழுக்கமுடையவன், நன்மைக்குறியவன் ... அப்படிங்கிறாரு.
அதே நேரத்தில் அப்படி அடுத்தவர் உரிமைப் பொருளாகிய மனைவியை விரும்பவர் அறியாமையுடையவர், தீ நெறியுடையவர், செத்த பிணத்திற்கு ஒப்பானவர், சிறுமை பண்புடையவர், அழியாத பழி அடைவார்; பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நாங்கு குற்றங்களை செய்தவராவார்; அப்படி இப்படின்னு அடுக்கிக்கொண்டே போகிறார் வள்ளுவர்.
யோவ் இது தெரிஞ்ச விஷ்யம் தானே- இதுல என்னத்தையா கண்டுட்டே அப்படி நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அவசரம் வேண்டாம் ....

அடுத்தவன் மனைவியை அபகரிப்பது பாவம் தானே- நம்ம வள்ளுவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறாரு?

அதாவது அவருக்கும் மனைவி என்பவள் ஆடவனின் உடைமைகளில் ஒன்று அவ்வளவுதான். அதை அபகரிக்காதேன்னு ஓன்னு ஒப்பாரி வைக்கிறார்.
உலகத்தில் உன்னதனமான தாயைப் பற்றியோ தாய்மையைப் பற்றியோ ஒரு வரிகூட எழுத மனமில்லாத இந்த வள்ளுவருக்கு ஒரு பெண்ணை அடுத்தவனின் உடைமைப் பொருளாக பார்க்கும் இந்த ஊனப் பார்வையைத்தான் நம்முடைய தற்கால பகுத்தறிவுப் பார்வை பார்க்கிறது.

ஒரு தப்பு செய்யும் மாணவனுக்கு பெஞ்சு மேல் நிற்கச் சொல்லி தண்டனை வழங்குவது போல், எப்போதும் உட்கார்ந்திருக்கும் வள்ளுவனை குமரியில் நிற்கவைவிட்டார் கலைஞர். பேஷ் பேஷ்...

இப்படியாக திருக்குறளை புடம்பொட்டு புரட்டி எடுத்திருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றேன். வெறும் போற்றி போற்றி பாடுதலும், கம்ப இராமயணத்தில் வரும் சீதையின் பாவடையில் தமிழை தேடி வந்த அடியார்க்கன்பனுக்கு இந்த துணிவு வந்திருப்பது நமக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.


அடுத்த தலைப்புகளை பின்னர் பார்ப்போம் ...

கம்பனை விஞ்சும் கொம்பனும் உண்டா ?

jeudi 4 mars 2010

‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி

வே.மதிமாறன்

சுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33நாடுகளில் கிளைகள். 32வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு!

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்!

இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் ...

இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.

இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி ...

இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.

எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .

இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான். (அட). அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

துணையோடு தூண்டில்

இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.

ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளியாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.

நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா

பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்

நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.

தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப்பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.

நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்திலேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்

இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடுவோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா

நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமிஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.

இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்?காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது.

மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.

இப்போது அவத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.

ஆ.விஜயானந்த்- நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

தவறு செய்யவில்லை-நித்யானந்தாவின் மறுப்பு வீடியோ!




மிகவும் மனம் நொந்துபோன ஒரு மாஜி பக்தகோடியின் கோபம் :
On: 08 Mar 2010 12:12 pm அயோக்கிய நாயே... இதன்பிறகு என்ன உண்மைகளை சேகரிக்கப்போகின்றாய். நாய்வேசம் போட்ட வேசமகனே. நீ மாற்றான் மனைவியோடு காமக்கலியாட்டம் போடும் வீடியோ பொய் என்கின்றாயா நாயே? உன்முகமே காட்டிக்கொடுக்கின்றதுடா அயோக்கிய ராஸ்கள். உனக்கு எந்த தேவிடியா பயல்கள் சப்போட் தருகிறானுகள். உனக்கு சப்போட் தரும் நாதாரிகள் ஒரு அப்பனுக்கு பொறந்தவனாக இருக்கவே மாட்டானுகள். நீ செய்தது சட்டரீதியானதா? காமக்கொடூரா? நீ செய்ததை இல்லை என்று வாதிடுவாயா? இப்போது உன் சல்லாபத்துக்கு துனையாக இருந்த ரஞ்சிதாவை பயமுறுத்தி கணவன் மனைவியாக சட்டரீதியாக வாழ்ந்ததாவும் அவள் தன் முதல்கணவனை சட்டரீதியாக டைவேர்ஸ் பண்ணியதாகவும் உன் பணப்பலத்தால் வாங்கிவிட்டதாக செய்திகள் உலவருகின்றது என்பது பொய்இல்லை. அதோ சமயம் உன் ஜில்மல் வேலைகள் எல்லாம் முடிந்ததன் பின்னர் நீயும் ரஞ்சிதாவும் கணவன் மனைவி என்று உலகுக்கு காட்டி ஆன்மீகத்தேவைக்காக அதனை மறைந்து வாழ்ந்தாக கதைவிடுவாய் என்பது உலகறிந்த பொய். உன் ஜில்மல் வேலைகளை நம்பி உன்னை பின்பற்றும் நாதாரி கூட்டம் மீண்டும் ஐயோ சாமியோ என்று உன்பின்னால் வரும் அதற்காக அடிக்கடி உனது பக்தர்கள் பக்தர்கள் என்று பேட்டி கொடுப்பதும் உனக்கு உலகம்பூர தொடர்பு இருப்பதாக காட்டிக்கொள்வதும் உன் அசிக்கத்தனமாக செயலுக்கு ஒத்துழைத்த உன் கயவர்கூட்டத்தாருக்கு நீ கொடுக்கும் செய்தி என்பதனை உலகும் அறியும். தேவடியா மகனே நீ முதலில் வெளியால் வா.. நீ யாரை பக்தர்கள் என்று எண்ணி கதைஅளக்கின்றீயோ அவர்களே உன்னை தெருநாயினை கல்எடுத்து எறிந்து கொல்வது போல் நடு சந்தியில் வைத்து உன்னை கல்லெறிந்து கொல்வதற்கு தயாராக காத்திருக்கின்றனர் பரதேசி. இதன் பிறகும் உன் வேசத்துக்குள் பாதுகாப்பு தேட முயற்சிப்பதும் புரியுதுடா நாயே- நன்றி தட்ஸ்தமிழ்


lundi 1 février 2010

மொஹமதுவையே தூக்கி சாப்பிடும் முஸ்லிம்

lundi 25 janvier 2010

உயிருக்கு போராடும் எஸ்.ஐ.-ஆம்புலன்சுக்கு காத்திருந்த மந்திரிகள்


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.


தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நன்றி அதிகாலை.காம்
jeudi 21 janvier 2010

தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு

தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு
mardi 12 janvier 2010

உணர்வாரா இசைஞானி?

மேட்டுக்குடி இசைவடிவத்தைப் பின் தள்ளி, நாட்டுப்புற மக்களின் இசை வடிவத்தை நாடறியச் செய்த இசைமேதை இளையராஜா, கலைஞரால் இசைஞானி என்று பெருமைப்படுத்தப்பட்டவர் என்பதை நாடறியும். இலண்டன் நகரில் சிம்போனி இசையை இசைத்துக்காட்டிய ஒரே ஒடுக்கப்பட்ட திராவிட இசைமேதை அவர்.

மதுரை ஆதினம், காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை இயேசு, நபி என்று புகழ் பாடியபோது, “இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்கள் யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க” என்று இளையராஜா ஜெயேந்திரரைப் பற்றி பேசி காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்தியதாக ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திருச்சியில் மாணவிகள் மத்தியில் ஜெயேந்திரர் பேசுவதாக இருந்த கூட்டத்தில் ஓர் ஆசிரியை, மாணவிகளைப் பார்த்து யாரெல்லாம் மாதவிலக்கானவர்களோ அவர்கள் அப்போது அங்கே இருப்பது தெய்வக் குத்தமாகும் என்று சொன்னபோது, ஒரு மாணவி, “இவ்வளவு சுத்தம் ஆச்சாரம் பார்க்கிறவர் ஏன் மேடம் ஜெயிலுக்குப் போகனும்” என்று திருப்பிக் கேட்டுள்ளார். உடன் இருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஜெயேந்திரர், பெண் தொடர்பு, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தலைவர், தன் 75 ஆம் பிறந்தநாள் விழாவில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த கருப்பு மனிதர் என்ற காரணத்திற்காக, கைபட்டு விடக் கூடாது என்ற “தீட்டுச்” சாத்திர வர்ணாசிரம சிந்தையால், தன் உதவியாளர் கையால் விருது கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

திருச்சி திருவரங்கம் கோயில் முதல் கோயில்களுக்காக இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த போதும், இளையராஜாவைச் சூத்திரனாகப் பார்த்து, அப்படியே நடத்தியிருக்கிறார் ஜெயேந்திரர்.

ஒரு தடவை பெரியார் திடலுக்குச் சென்ற இளையராஜா, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட திராவிடர்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மறுத்துவிட்டார். பரவாயில்லை. அப்படியானால் அந்த மரியாதை “அவாள்”களிடம் இருந்தாவது கிடைத்ததா? இல்லை! மாறாக தீட்டுக்குரிய சூத்திரனாகத்தானே காஞ்சி மடத்தலைவர் பார்த்தார்.

2008 ஆம் ஆண்டு, இளையராஜாவிற்கு பத்மஸ்ரீ போன்ற விருதுகளை இன்னும் வழங்காதிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து கவிஞர் அறிவுமதி நம் இதழில் எழுதியிருந்தார். இளையராஜாவின் இசை மேதமையை இப்போதும் நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

ஆனால் மதிப்பவர்களை மதிக்காமல், மதிக்காதவர்களை மதிக்கும் இளையராஜாவை அவாள்கள் அவமரியாதை செய்வதை இளைஞானி உணர்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை, நாம் உணர்கிறோம்!

-நன்றி கீற்று இ.இளமாறன்